18 மே, 2017




நீ
எனக்கு பரிசளித்த
தூக்கம் தின்ற இரவுகள்
எத்தனை வன்மம் நிறைந்தது

கடக்க முடியாத அந்த
நீண்ட இரவுகள்
உன் சாபங்களின்
வண்ணங்கள்

காட்டு குதிரைகள்
பூட்டிய உன் ரதத்தின்
சக்கரங்களாய் ஓடி
அலைகிறது  என் மனம்

கடல் விழுங்கும்
சூரியனாய் என் கண்கள்

கல்லறை தோட்ட பூக்களாய்
என் கனவுகள்

மதில் மேல்  உளாவும்
கருப்பு பூனையாய்  என் சிந்தனை


விட்டல் பூச்சியாய் நான்
என்னை கவர்ந்திழுக்கும் விளக்காய்
நீ

கருத்துகள் இல்லை: