17 மே, 2017




என் தோட்டத்து செடிகளை
பார்த்து பார்த்து வளர்க்கிறேன்
ஆழமாய் வேர்பிடித்து வளர
அளவாய் நீர்விட்டு வளர்க்கிறேன்
காற்றும் வெளிச்சமும் கிடைக்க செய்கிறேன்
களைகளை களைவதும்
உரங்கள் இடுவதும்
ஆனந்த கடமையாய் நிறைவேற்றுகிறேன்
வாடாமல் வதங்காமல்
வளர்த்தெடுக்கும் செடிகள்
நாளை மரங்கள் ஆகும் என்பது
இந்த தோட்டக்காரனின் நம்பிக்கை
அந்த மரங்கள் நா‌ளை
நிழல்களையும்
பூக்களையும்
காய்களையும்
கனிகளையும்
வருவோர்க்கு வாரி வழங்க வேண்டும்
என்பது தோட்டக்காரன்
இறைவனிடம் வைக்கும் கோரிக்கை......

கருத்துகள் இல்லை: