20 மே, 2017



வற்றாத சுனை ஒன்றில்
‌கசிந்து  கிடக்கிறது
அப்பழுக்கற்ற நீர்

வறண்ட நாவோடு வழிப்போக்கன்
வழியில் தெரிகிறது சுனை
பாலையாய் அவன் தாகம்
படரி விழுந்து
முகம் புதைத்தான்
சுனையுள்ளே
வறண்ட நாவில் பாய்கிறது
சுனை நீர்
தீ காட்டில் மழையாய்
வயிற்றில் இறங்கியது நீர்

இருண்ட மேகத்தில்
கசிந்த நீராய்
கண்களில் இருந்து
முட்டிய நீர் ஒன்று
சட்டென்று தெரித்து விழுந்தது
சுனை உள்ளே.......

கருத்துகள் இல்லை: