11 அக்டோபர், 2012

கண்ணீர் அஞ்சலி

உதிர்ந்த பூக்களுக்கு
உதிரப்போகும் பூவின்
கண்ணீர் அஞ்சலி

செடிகளுக்கு
பூக்கள் பாரம்மில்லை
செடியைவிட்டு
பூக்கள் உதிருவது
என்னவென்று கருதுவது ?

பூத்துக் குழுங்குவதும்
வாசம் வீசுவதும்
சொற்ப காலங்களாய்
இருந்தாலும்
நம் உறவுகள்
என்பதின் முடிவு
வெறும் சருகுகள்

செடியே
உன்னில் இருந்துதான்
வந்தோம்
உதிர்ந்த பின்
உனக்கே உரம்மாவோம்

கால கணக்குகளுடன்
நம் கதைகள் எழதப்பட்டாலும்
காலமானலும்
எங்கள் காலம் வரை
மனத்தில் உங்கள்
மணம் குறையாது.......

வரமாய் பிறந்தவளே !


தவங்கள் எல்லாம்
வரங்கள் பெறுவதில்லை
எங்கள் தவத்தின்
வரமாய் பிறந்தவளே !

உன் கருவறை
பயணம் முடிந்து
உலக பயணம்
இன்று துவக்கம்

என் பயணத்தோடு
உன்னை இணைத்து
செல்வது என்பது
எனக்குப் பிடிக்கும்

உன்
பிறை முகம்
பார்க்க விட்டாலும்
என்
பாசறை அகம்
புகுந்து விட்டாய்

உன்
அழுகை சத்தம்
கேடக்க விட்டாலும்
அடி
நெஞ்சை நித்தம்
நெகிழ வைத்தாய்

உன் பிறப்பு
உலகுக்கு சிறப்பு
சேர்க்கட்டும்

எல்லாம் வல்ல இறைவன்
உனக்கு என்றும்
துணையாய் இருக்கட்டும்