சில வார்த்தைகளில்
அடங்குவதாய்யில்லை
உன் நளினம்
எத்தனை முறை
இதயம் துடித்திருக்கும்
உன் இமைகளின்
படபடப்புகள் கண்டு
கணக்கிட முடியாமல்
தொக்கி நிற்கிறேன்
உன் விழியின்
மொழி கொண்டு
கவிதை வரைந்திட
எத்தணித்து
உன் விழிகளோடு
பேசும் முயற்ச்சியெல்லாம்
ஒரு மௌனத்தில்
முற்றுப்புள்ளியாய் முடிகிறது
உன் உதடுகள் பேசும்
சிலேடை பேச்சுக்களில்
ஒரு காவியம் படைக்க முயன்று
படைத்தலை விட்டு
ரசிகனாய் நிற்க்கிறேன்
உன்னுடன் சாலையில்
நடக்கும் பொழுதெல்லாம்
நீ முன் செல்ல
பின் தொடருவேன்
உன் நடையின்
நளினங்களில்
நாட்டியம் கண்டவனாய்
உன் சின்ன குறும்புகள்
செல்ல சினுங்கள்கள்
அவை அத்தனையிலும்
ஒரு கவிதை விற்றுயிருந்தது
ஒரு மெல்லிய நளினத்துடன்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக