3 ஜூன், 2010

உன் நளினம்

சில வார்த்தைகளில்
அடங்குவதாய்யில்லை
உன் நளினம்

எத்தனை முறை
இதயம் துடித்திருக்கும்
உன் இமைகளின்
படபடப்புகள் கண்டு
கணக்கிட முடியாமல்
தொக்கி நிற்கிறேன்

உன் விழியின்
மொழி கொண்டு
கவிதை வரைந்திட
எத்தணித்து
உன் விழிகளோடு
பேசும் முயற்ச்சியெல்லாம்
ஒரு மௌனத்தில்
முற்றுப்புள்ளியாய் முடிகிறது

உன் உதடுகள் பேசும்
சிலேடை பேச்சுக்களில்
ஒரு காவியம் படைக்க முயன்று
படைத்தலை விட்டு
ரசிகனாய் நிற்க்கிறேன்

உன்னுடன் சாலையில்
நடக்கும் பொழுதெல்லாம்
நீ முன் செல்ல
பின் தொடருவேன்
உன் நடையின்
நளினங்களில்
நாட்டியம் கண்டவனாய்

உன் சின்ன குறும்புகள்
செல்ல சினுங்கள்கள்
அவை அத்தனையிலும்
ஒரு கவிதை விற்றுயிருந்தது
ஒரு மெல்லிய நளினத்துடன்……

கருத்துகள் இல்லை: