மாற்றம் என்பதே
மாற்ற முடியாத
ஒன்றாய் இருப்பதால்
மனமாற்றம் தவிர்க்க
முடியாத ஒன்றாகிவிடுகிறது
மனமாற்றம் என்பது
எதற்காக
எதை நோக்கி
இவை சிந்திக்கப்பட
வேண்டியவை
நான் என்பது
அறிவா?
ஆன்மாவா?
மாற்றம் என்பது
அறிவிற்கா?
ஆன்மாவிற்கா?
நான் என்ற மாயையில்
துழையும் பொழுது
முதலில் தேடபட வேண்டியது
நான் யார் என்பதே
பின்னரே தெரிய வரும்
மாற்றம் பெறுவது
அறிவா?
ஆன்மாவா?
அறிவின்
தேடல் ஆதாயங்கள்
ஆன்மாவின்
தேடல் அன்பு
அறிவின்
தேடல் படபடப்பு
ஆன்மாவின்
தேடல் அறவனைப்பு
அறிவின்
தேடல் காரணங்கள்
ஆன்மாவின்
தேடல் மன்னிப்பு
அன்பும்
அறவனைப்பும்
மன்னிப்பும்
நிலையானது
மாற்றம்மில்லாதது
எண்ணங்களும்
செயல்களும்
அறிவை சார்ந்தது
நிலையில்லாதது
மாற்றம் உடையது
எண்ணங்களின் மாற்றத்தால்
செயல்கள் மாறுவதால்
நான் மாறுகிறேன் என்றால்
ஆன்மாவின் நிலை என்ன ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக