21 டிசம்பர், 2006

வெண்ணிலவே

வெண்ணிலவே வெண்ணிலவே
வெட்கம் கொண்டு என்னை பார்ப்பது என்ன
கன்னித்தமிழ் பெண் இவளோ
கண்ணில் காதல் கதை சொன்னது என்ன
விழியால் வலியை தந்து சென்றது என்ன
உயிரில் உயிரை கலந்து சொன்னது என்ன
பாடுகிறேன் பாடல் ஒன்று
மனம் தேடுது உன்னை இன்று

நீ இருக்கும் இடத்தில் மட்டும்
நட்சத்திர பூ மலரும்
நீந்தி வர வான் இருந்தும்
என் இதயம் உன் விருப்பம்

இருளை மனம் தான் உடுத்தியிருக்க
வெளிச்சம் என்று நீ தருவாய்
உரக்கம் இல்லா இரவுகளில்
நெருங்கா இடத்தில் நீ இருப்பாய்

முகிலால் முகத்தை நீ மறைத்தாய்
மெளனம் மட்டும் நீ மொழிந்தாய்
என் கண்மணிகளில் நீ நிலா
என் நினைவுகளில் தினம் உன் உலா!

14 டிசம்பர், 2006

நட்பு

சமிப காலங்களாய்
இதயத்தில் ஒரு தவிப்பு
கிடைக்குமா
நல்ல ஒரு நண்பனின் நட்பு

உண்மையாய் நேசிக்கும்

உன்னதமான நண்பனின் நட்பு

இழிவுப்படுத்தாமல்
இன்முகம் கொண்ட
ஒரு நண்பனின் நட்பு

நட்பை மதிக்கும்
நல்லதொரு நண்பனின் நட்பு

நண்பனை நம்பும்
நம்பிக்கை கொண்ட
ஒரு நண்பனின் நட்பு

பொறாமையில்லா
பொருமையுடைய நண்பனின் நட்பு

உள்ள உணர்வுகளை
உண்மையாய் மதிக்கும் நணிபனின் நட்பு

சகோதரத்துவத்தை
சுவாசிக்கத் தெரிந்த நண்பனின் நட்பு

குறையை திரைப்போட்டு
நிறையை நெஞ்சில் நிருத்தி
அன்பய் பொழியும்
அழகிய நண்பனின் நட்பு

கிடைக்குமா
இப்படியொரு நண்பனின் நட்பு ?

9 டிசம்பர், 2006

காதல்

காதல்
இதயஈர்ப்பு
இதில்
விழாத உள்ளங்களில்லை

6 டிசம்பர், 2006

தவிப்பு

கையில் கிடைத்த அரியப் பொருளை
தவறவிட்டதைப் போன்ற உணர்வு
நீயில்லாத இன் நாட்களில்.......

சொல்லிவிடு

முடிவாய் ஒன்றைய் சொல்லிவிடு
உன் நினைவுகளில் இருந்து
நான் எப்பொழுது ஒய்வுக் கொள்வதென்று ?

உனக்கு தெரியுமா ?

உன்னை நேசிப்பது நான் மட்டுமல்ல
என் கிறுக்கல்களும் தான்
ஏன் தெரியுமா?
என் கிறுக்கள்களின் தாய் நீ
குழந்தைகள் தாயை நேசிக்க மறப்பதில்லை
என் கிறுக்கல்கள் உன்னை நேசிக்க மறக்கவில்லை

உடைந்த மனது

வெள்ளைக் காகிதமாய் இருந்த என் மனதில்
உன் விழிப் பேனாவால்
காதல் என்னும் கவிதை வரைந்துவிட்டாய்
உன் பேனாவின் கூர்(மை)யால்
காயம் பட்ட இதயத்தில்
இன்று
வலிகளும் ரணங்களும் மட்டுமே!

போட்டி

இங்கு
ஒரு பலமானப் போட்டி நடக்கிறது
ஆம், கடிக்காரத்தின் முள்ளின் ஓட்டத்திற்க்கும்
என்னுள் உன் நினைவுகளின் ஓட்டத்திற்க்கும்
இடையே மிகப் பெரியப் போட்டி!

கொள்ளைக்காரி

உடல் மட்டும்
இங்கு இயங்கிக் கொண்டுயிருக்க
என் உள்ளத்தையும்
அதன் உணர்வுகளையும் மட்டும்
உன்னால் எப்படி கொள்ளையடிக்க முடிந்தது

ஊர்வலம்

விழியின் ரேகையாய்
உன் பிம்பம் பதிந்ததினால்
இமைகள் முடினாலும்
கண்களில் உன் ஊர்வலம்

தாய்

முன்னூறு நாட்கள் இருட்டறை பிரவேசம்
தொப்புள் கொடி வழியே தினம் என் சுவாசம்
அவள் உணவை கொடுத்து உயிரை வளர்த்தாள்
நான் வலியைக் கொடுத்து வெளியே வந்தேன்
அவள் கண்கள் இரண்டில் கண்ணீர் அருவி
என்னை ஈன்றவளுக்கு இன்னொரு பிறவி
தலைக்கீழாக பிறந்த என்னை
நேர் வழியில் நடக்க வைத்தாள்
தரணியிலே இவனும் ஒரு
மனிதன் என மதிக்க வைத்தாள்
இத்தனையும் செய்த உனக்கு
நான் என்ன செய்தேன்னம்மா ?
உலகத்தை உன் காலடியில் வைத்தாள் கூட
உன் சேவைக்கு ஈடாகுமா ?

என் தேசத்து சகோதரிகள்

வறுமையை விரட்ட வெளிநாடு வந்த
என் தேசத்து சகோதரிகள்
கொத்தடிமைகளாக்கப்பட்டு
உடலை விற்க்கும் வியாபாரிகளாக மாற்றப்பட்டு
தன்னையிழந்து வாழ்க்கைத் தேடுகிறார்கள்
இவர்கள் வெளிச்சம் தேடும்
விட்டல் பூச்சிகள்!

காதலியின் கனவுகள்

நீ இன்னும் எத்தனை இரவுகள்
என் விழிகளுக்கு சுமையாகப் போகிறாய்
உன் கனவுகளின் சுமை
என் இமைகளுக்கு சுகம்தான்
நீயில்லாத என் வாழ்வு
பூமிக்கு சுமைதான்!

தன்நம்பிக்கை

விழுகின்ற அலை கூட
மறுபடியும் எழுகின்றன
புயல் கொன்ற கிளைகள் கூட
மறுபடியும் துளிர்கின்றன
தோல்வி என்பது நிரந்தரமில்லை
தோல்வி என்பது அனுபவமே
முயன்றால் முடியாததில்லை
முயற்ச்சியில்லாமல் எதுவும் முடிந்ததில்லை
மனதில் வலி தரும்
தோல்வியின் புண்கள்
நம்பிக்கை உழைப்பு
வெற்றியின் இரு கண்கள்
மனிதன் என்றால் போராட வேண்டும்
அவன் வாழ்க்கை மரணத்தை வென்றிட வேண்டும்!

நிலா

நிலாவே!
உன்னை யார் பெண் பார்க்க வந்தது
வானத்து ஜன்னலில்
கிரமத்து பெண்னைப் போல்
அரை முகம் காட்டி யாரைத் தேடுகிறாய் ?

தூது

காற்றே!
நீ மேகத்துடன் போராடினாய்
மழைக்கு விடுதலை
அவள் மனதுடன் போராடுவாயா
கிடைக்கும்
என் காதலுக்கு விடுதலை!

மரணம்

மரணம்
வாழ்க்கை என்னும்
கவிதையின் முற்றுப்புள்ளி.

முகவரி

வாழ்க்கையின்
தேடலில் துழைந்துப்போன எனக்கு
முகவரி நீதான் முழு நிலவே......