சருகுகள்
காற்றில் சுழல்வதுப்போல்
சிரிப்பினால்
நீ என்னை
சுழல்ல விட்டாய்
சிறகுகள்
தந்து பறக்கவிட்டு
பின்பு
சிறைகளில் என்னை
நீ அடைத்தாய்
சிலுவையை
கூட சுமந்திடலாம்
காதல்
தந்த ரணங்களின்
வலிகள் சுமப்பதற்க்கு
இரவுகள்
மெல்ல விடிந்திடுமே
இருக்கங்கள்
என்று உடையும்
இரக்கம் பிறப்பதற்க்கு
கவிதை
வரிகளின் ஆழத்தில்
காதல்
வலிகளின் வேதனை
நீ அறிவாய்
தேவதை
போல வந்தவளே
காதல்
வரங்களை என்று
நீ தருவாய்....................
15 ஆகஸ்ட், 2007
1 ஆகஸ்ட், 2007
காதலின் அடுத்தப் பக்கம்
ஒரு மகள் தான் விரும்பியவுடன் வாழ விரும்பி தன் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டாள். அந்த பெற்றோரை நினைத்து என்னுள் எழுந்த கிறுக்கல்கள் இவை :
நீ
படித்தாண்டினாய்
இடித்தாங்க
இதயங்களுடன்
இழிந்துப்போனார்கள்
உன் பெற்றோர்கள்.........
---------------------------------------------------------------
உன்னை
சுமந்தப் பொழுது
பாரம் தெரியாதவளுக்கு
ஊரார் உமிழ்ந்தப் பொழுது
சுமக்க முடியவில்லை
வேதனையின் பாரத்தை.........
---------------------------------------------------------------
அன்று
உன் தேவைகள்
அறிந்து சேவைகள்
செய்தார் உன் தந்தை
இன்று
கூனிக்குறுகி நின்றார்
துளிக் கூட நினைக்கவில்லை
அதை உன் சிந்தை......
நீ
படித்தாண்டினாய்
இடித்தாங்க
இதயங்களுடன்
இழிந்துப்போனார்கள்
உன் பெற்றோர்கள்.........
---------------------------------------------------------------
உன்னை
சுமந்தப் பொழுது
பாரம் தெரியாதவளுக்கு
ஊரார் உமிழ்ந்தப் பொழுது
சுமக்க முடியவில்லை
வேதனையின் பாரத்தை.........
---------------------------------------------------------------
அன்று
உன் தேவைகள்
அறிந்து சேவைகள்
செய்தார் உன் தந்தை
இன்று
கூனிக்குறுகி நின்றார்
துளிக் கூட நினைக்கவில்லை
அதை உன் சிந்தை......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)