10 ஜூன், 2007

எதைத் தேடி

பொழுதுகள் விடிகின்றன
இரவுகள் கடக்கின்றன
எதையும் அறியாமல் மனம்
தேடிக்கொண்டே இருக்கின்றன
வெயில் மழையோடு
வந்த வானவில்லின் வர்ணங்களை
உச்சிப்பொழுது
தார் சாலை கானல்களை
மாயையின் மயக்கத்தில்
நிஜங்கள் மறந்தப்பொழுது
நிகழ்வுகள் எல்லாம் கனவுகளாய்
நிழல்களில் நிஜம் தேடி
நிம்மதியின் விலாசங்கள்
மறக்கடிக்கப்பட்டு
அலைகிறது மனது
எதைத் தேடி ?

கருத்துகள் இல்லை: