பொழுதுகள் விடிகின்றன
இரவுகள் கடக்கின்றன
எதையும் அறியாமல் மனம்
தேடிக்கொண்டே இருக்கின்றன
வெயில் மழையோடு
வந்த வானவில்லின் வர்ணங்களை
உச்சிப்பொழுது
தார் சாலை கானல்களை
மாயையின் மயக்கத்தில்
நிஜங்கள் மறந்தப்பொழுது
நிகழ்வுகள் எல்லாம் கனவுகளாய்
நிழல்களில் நிஜம் தேடி
நிம்மதியின் விலாசங்கள்
மறக்கடிக்கப்பட்டு
அலைகிறது மனது
எதைத் தேடி ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக