25 மார்ச், 2010

சில கிறுக்கல்கள்

நீ
துவைத்த இதயத்தில்
நீங்கவில்லை
உன் நினைவுகளின்
கறைகள்
-------------------------------------------------------------
அவள்
என் வாழ்வை
அள்ளி சென்ற
ஆழி பேரலை
------------------------------------------------------------


நிலாவைத்தான்
வீட்டுக்கு
அழைத்துவந்தேன்
அது தேய்பிறையானதால்
அம்மாவாசையானது வாழ்வு


-----------------------------------------------------------


சுமைத்தாங்கி
கற்களுக்கு
சுமைகள் பாரம்மில்லை
உன் நினைவுகள்
சுமக்கும் இதயத்திற்க்கு
வலிகள் தெரிவதில்லை

3 மார்ச், 2010

ஆடை

நான் விரும்பி
வாங்கிய ஆடை
சில நாள் அணிந்தேன்
அழகாய்தான் இருந்தது
அறிந்தேன் பிறகு
அது என்
மானம் காக்கவில்லையென்று


அணிய வெறுத்தேன்
அந்த ஆடை துறந்தேன்
குளிரும்
வெப்பமும்
மேனியை வருத்தியது
கிடந்த போர்வைக்குள்
என்னை ஒளித்து
தலையை தூக்கி
வெளியே பார்த்தேன்


போர்வையிலே
ஆயிரம் ஓட்டை


துறந்த ஆடையை
திரும்பி பார்த்தேன்
சாயம் பாதி வெளுத்திருந்தது……