9 ஆகஸ்ட், 2010

ஆண்டு தோறும் காத்திருக்கிறேன்

ஒவ்வொரு ஆண்டும்
உனக்காய் காத்திருக்கிறேன்
நான் சுமந்துக்கொண்டு இருக்கும்
சுமையை இரக்க
உனக்காய் நான் காத்திருக்கிறேன்

பசி என்றால் என்ன
தெரியாதிருந்த எனக்கு
பசியை உணரவைக்கிறாய்
ஏழையின் துயரை
ஆழமாய் அறியவைக்கிறாய்

யாருக்கும் எதையும்
விட்டுக்கொடுக்காத என்னை
தியாகம் செய்ய
கற்றுக் கொடுக்கிறாய்
உணவை விட்டுக்கொடுத்தேன்
தண்ணீர் விட்டுக்கொடுத்தேன்
மெல்ல மெல்ல விட்டுக்கொடுக்க
ஞானத்தை பெற்றுக்கொடுக்கிறாய்

பேராசை தீயில்
உழண்ட மனதை
பெரும் போராட்டத்தின் பின்பும்
கட்டுப்படுத்த தவறி விழித்தப்பொழுது
என் மனத்திற்க்கு கடிவாளமிட்டு
என் மனித தன்மையை
திருப்பிக் கொடுக்கிறாய்

என் ஜம்புலன்களின்
வழியே மாசுபட்ட
என் உள்ளத்தை
திரைகளிட்டு
மறைத்துவைக்கிறாய்
பின்னே
அவன் கருணை கொண்டே
என் உள்ளத்தை
கழுவி சுத்தம் செய்கிறாய்

செல்வமும்
வறுமையும்
இருகோடுளாக
இணையாதிருக்க
ஜகாத் என்னும்
பாலத்தால்
இரண்டையும்
இணைத்துவைக்கிறாய்

வறுமையற்ற
சமுகம் காண
புதுப்புரட்சி செய்கிறாய்
கருணை ஊற்றை
தூர் எடுத்து
மனித மனத்தில்
மறுமலர்ச்சி காண்கிறாய்

மனத்தில் உண்டாகும்
வாதம் நீங்க
வேதம் தந்தாய்
மனிதனாய் வாழ
பயிற்ச்சி செய்ய
ஆண்டில் ஒரு முறை
மாதம் தந்தாய்
இறைவா எங்களுக்கு
ரமலான் மாதம் தந்தாய்


ரமலானே வருக
பாவம் கரைந்திட
அருள் மாரி
பொழிக!

5 ஆகஸ்ட், 2010

ஹைக்கூ


சிலைட்
--------
என்
விரல் வரையும்
ஓவியத்திற்காக
காத்து கிடக்கறது
அவள்
கருப்பு தேகம்
------------------------------------------------

உனக்காக
------------
என்னுடைய
உலகம்
விடிவதும்
முடிவதும்
உனக்காக
-----------------------------------------------

சோறு
--------
பணக்காரன்
நாக்கு ருசிக்கு
ஏழைகளின்
வயிற்று பசிக்கு

-----------------------------------------------

மன்னிப்பு
----------
மனிதத்தின்
பிரதிபளிப்பு
மன்னிப்பு

-----------------------------------------------

இரக்கம்
---------
உள்ளத்தின்
இருக்கம்
அறுக்கும்
இரக்கம்

------------------------------------------------

பொறுமை
-----------
உணர்ச்சிகளின்
உச்சத்தில்
நிதானம்
அதில்தான்
உண்மை பொறுமையின்
பெறுமை

-------------------------------------------------

போர்
-------
மனித சடலங்கள் மேல்
மகுடம் சூட
மனிதநேயமே இல்லாத
மனித வேட்டை

--------------------------------------------------

பரிசல்
--------
தண்ணீரில்
தவழும்
தாரகை

--------------------------------------------------

புல்லாங்குழல்
--------------

காற்று
தீண்டினால்
கவிதைகள்
பிரசவிப்பாள்
இந்த
காட்டு மூங்கில்

----------------------------------------------

வயல்வெளி
------------
பூமி தாய்
உடுத்திய
பச்சை புடவை

---------------------------------------------

வசந்த காலம்
--------------
வானவில் போல்
நீ
வந்து மறைய
வாசலில் தவம்
கிடந்த நாட்கள்
என்
வசந்த காலம்

---------------------------------------------------

பேருந்து
---------
சாலையில்
ஒரு
சமத்துவபுரம்

------------------------------------------------------

பேருந்து
---------
ஒரு இயந்தரத்தின்
ஓட்டத்துக்குள்ளே
பல இதயங்களின்
ஓட்டம்

-----------------------------------------------------

அடை மழை
---------------
பூமி மீது
மேகத்தின்
தீராத
மோகம்

------------------------------------------------------

சுடர்
-------
திரியில் பூத்த
திவ்ய மலர்
தீ சுடர்

--------------------------------------------------------

பயணம்
---------
வலியோடு துடங்கி
வழிகள் பல சென்று
வலிகள் பல கண்டு
வலியோடு முடிகிறது
வாழ்க்கை பயணம்

------------------------------------------

சிறுவர்கள்
-----------
மலர்ந்தால்
இறைவனுக்கா
இரங்களுக்கா
தெரியாத
மலர்
மொட்டுக்கள்.....

--------------------------------------------

விறகு வெட்டி
---------------
வறுமை கரையான்
அரித்த மரம்

---------------------------------------------

சுற்றி திரிந்த நாட்கள்
-------------------------
மலரில்
தேன் தேடிய
பட்டாம்பூச்சி நாட்கள்......

-----------------------------------------------

காந்தி சாலை
--------------
சாலை நடுவே
பொக்கை வாய் சிரிப்பு
பெயரை பார்த்தால்
காந்தி சாலை

4 ஆகஸ்ட், 2010

என்னுடைய நாட்கள்

கடினத்தோடு
கிழித்து எறியப்படுகிறது
என்னுடைய நாட்கள்

முகமூடி அணிந்த
மனிதர்களின் போலி சிரிப்புகளையும்
பின்னால் பேசும் புறங்களையும்
கடக்கின்ற மணித் துளிகளில்
நாகரிகப் போர்வையில்
சுயம் போட்டுக்கொள்ளுகின்றன
பொய் முகமூடிகளை

சுயநல மனிதர்களின்
நாவின் அசைவுகள்
சத்தியத்தை சாகடித்த வசவுகள்
இதில் நாட்கள் நகர நகர
தோய்க்கப்படுகிறது மனம்
நிதம் நிதம்
தேர்ச்சியடைகிறது ஞானம்
தினம் தினம்

தேவையின் நிற்பந்தங்களும்
தேடலின் தவிப்புகளும்
விலங்குகளாக
பின்னிப் பினைந்து கிடக்க
நாட்கள் பயணிக்கின்றன
வலுவான நாளைய
எதிர்பார்ப்புடன்

புதிய புதிர்களுடன்
தினம் தினம்
பூக்கிறது
புதிய நாள் ஒன்று
விடை தேடியே
விழுகின்ற
அன்றையப் பொழுதுகள்

மயான அமைதியுடன்
கரும் இரவுகளில்
சொல்லப்படாத மௌனத்துடன்
வானத்தில் அந்த நிலாவும்
சுகமான நினைவுகளின்
சுமைகளில்
என் மனமும்

விடியலின்
தொடக்கத்துக்காக
இரவின் முடிவு காத்திருக்கிறது
நானும் காத்திருக்கிறேன்
கடினத்துடன் கிழித்து எறிய
அடுத்த நாளை……