23 அக்டோபர், 2009

மனிதம் வாழவிடுங்கள்

ஒடுவது குருதி
இதில்
தமிழன் என்ன
தலித் என்ன
இசுலாமியன் என்ன
இந்து என்ன


ஈளத்தில் செத்தாலும்
இந்தியாவில் செத்தாலும்
பாலஸ்தினத்தில் செத்தாலும்
பாக்கிஸ்தானில் செத்தாலும்
செத்தது மனிதன்
கொன்றவனும் மனிதன்


இனம் காக்க
இனத்தை அழிப்பவர்கள்
தன் இனத்தினுள்ளே
இனம் காக்க
தம் இனம்மழிப்பார்களோ


அழிந்து அழிந்து
மனிதம் அழிந்து
புது உலகம் படைத்து
யாருக்கு லாபம்


ஆயுதம் வாங்கி
ஆயுதம் வாங்கி
உலகை அழிப்பது
மனிதத்தின் சாபம்




உலகை அழித்த
காசை சேர்த்திருந்தால்
அகிலம் முழுதும்
பசியை ஒழித்து
பினியை அழித்திருக்கலாம்


மனிதனை வாழவிட்டு
மானிடம் வாழ செய்தால்
குரோதம் துழைத்து
அன்பு தழைத்து
பூமி செழித்திடலாம்


ஆளும் வர்கம்
பரம்பரையாய் கொழிக்க
இன்னும் எத்தனை
அடிமை தலை
தேவைபடுமோ


மனிதன்
மனிதனாய் வாழ
இன்னும் எத்தனை
உயிரை பலி
கேட்டிடுமோ

21 அக்டோபர், 2009

என் கவிதைகள்

நான்
எழுதிய கவிதைகளில்
யாப்பு அணி
இருந்ததா என தெரியாது
அதில்
நீ ஒருத்தி மட்டுமே
இருந்தாய் என்பது தெரியும்.....

20 அக்டோபர், 2009

நானும் அவளும் அப்படித்தான்

நேற்று

நானும்
அவளும்
அப்படித்தான்

நகமும்
சதையும்
எப்படியோ

நானும்
அவளும்
அப்படித்தான்

பகலும்
ஒளியும்
எப்படியோ

நானும்
அவளும்
அப்படித்தான்

இமையும்
விழியும்
எப்படியோ

நானும்
அவளும்
அப்படித்தான்

கடலும்
அலையும்
எப்படியோ

நானும்
அவளும்
அப்படித்தான்

கவிதை
பொருளும்
எப்படியோ

இன்று

நானும்
அவளும்
அப்படித்தான்

கிழக்கும்
மேற்க்கும்
எப்படியோ

நானும்
அவளும்
அப்படித்தான்

இரவும்
பகலும்
எப்படியோ

நானும்
அவளும்
அப்படித்தான்

ஒளியும்
இருளும்
எப்படியோ

நானும்
அவளும்
அப்படித்தான்

வானும்
மன்னும்
எப்படியோ

16 அக்டோபர், 2009

காதல்

காலத்தை தாண்டி
ஓட கால்களும்
காலத்தை இழுத்து
பிடிக்க கைகளும்
முரணாய் வேண்ட வைக்கும்
காதல்

எது வெற்றி ?

என் காதலின் தற்கொலையை
எப்படி என் வெற்றி
என்று எண்ண முடியும்
இது கூட தெரியாமல்
நான் இருமாப்பாய் இருப்பதாக
புலம்புகிறது உன் உறவுகள்
நான் என்ற போதையில்

பிரிவு

நாம்
என்று இருந்தோம்
உன் உறவுகளின்
நான்
என்ற எண்ணம் இன்று
நீ
நான்
என்று ஆணோம்

விவாகரத்து

உனக்கு
பிடிக்கும் என்றே
எல்லாம் செய்தேன்
விவாகரத்தை தவிர ….

மனம்

என் மனதை கீறினால்
பால் வடிய
அது ரப்பர் மரம்மல்ல
உயிரும் உணர்வும் கொண்டது
உதிரம் மட்டும்தான் வடியும்

காதல் தோல்வி

உன்னை
ஆழமாய் காதலித்ததால்தானோ
உன் வீட்டார்
ஆனவமாய் உரசிப்பார்த்தார்கள்
என் தன்மானத்தோடு

வாழ்ந்த நாட்கள்

என் கவிதைகளை
கற்பனை எனலாம்
பொய் என்று கூட சொல்லலாம்
ஆனால்
உன்னோடு வாழ்ந்த நாட்களை
என்னால் நாடகம் என்று
சொல்ல முடியவில்லை

முத்தங்கள்

உன் உதட்டின்
முகவரி தெரியாமல்
காற்றில் அனுப்பிவைக்கிறேன்
கவனாமாய் பிடித்துக்கொள்
என் முத்தங்களை