30 மே, 2010

நானம்

உன் வெட்கத்தோடு
விளையாட நினைத்து
முத்தம்மிட்டேன்
உன் கண்ணங்களை

உதடுகள் விடைப்பெற்றபோது
நானம் விடை சொன்னது
திராட்சை ரச கோப்பைகளாய்
உன் கண்ணங்கள்………

26 மே, 2010

மௌன தருணங்கள்

அந்த மௌன
தருணங்களை
அசைபோடுகிறது மனம்

தாகம் கொண்ட
நெஞ்சோடு
விழிகள் நேரிடுகின்றன
விழிகள் பருகியது
காதலை

மிரள்ச்சியில் இருந்து
மீள மறுத்த மனதை
மீட்க்க முயன்றேன்
ஒரு யுத்தம் நடத்தியது
நினைவுகள்

கனவுகளின் ஊர்வலத்தில்
தினம் அவள் தரிசனம்
தரிகெட்டே திரிந்தேன்
தடுமாறிய வாழ்கையுடன்
அவள் கால்தடங்கள்
தேடி…..

22 மே, 2010

மழையின் சிநேகிதிக்கு

உன்னை விட்டு
உயரத்தில் இருப்பதால்
மேகம் அழுகிறது
ஜனிக்கிறது மழைத்துளிகள்


உன் கன்னத்தில்
முத்தம்மிடத்தானோ
வேகமாய் பயணிக்கின்றன
மழைத்துளிகள்


உன்னை முத்தம்மிட்டு
பட்டு தெரித்த
மழைத்துளிகள்
மோட்சம் பெற்று
மண்ணில் விழுந்தபோது
தேன்துளிகள்

18 மே, 2010

நான் மாறுகிறேன்

மாற்றம் என்பதே
மாற்ற முடியாத
ஒன்றாய் இருப்பதால்
மனமாற்றம் தவிர்க்க
முடியாத ஒன்றாகிவிடுகிறது


மனமாற்றம் என்பது
எதற்காக
எதை நோக்கி
இவை சிந்திக்கப்பட
வேண்டியவை


நான் என்பது
அறிவா?
ஆன்மாவா?


மாற்றம் என்பது
அறிவிற்கா?
ஆன்மாவிற்கா?


நான் என்ற மாயையில்
துழையும் பொழுது
முதலில் தேடபட வேண்டியது
நான் யார் என்பதே
பின்னரே தெரிய வரும்
மாற்றம் பெறுவது
அறிவா?
ஆன்மாவா?


அறிவின்
தேடல் ஆதாயங்கள்
ஆன்மாவின்
தேடல் அன்பு


அறிவின்
தேடல் படபடப்பு
ஆன்மாவின்
தேடல் அறவனைப்பு


அறிவின்
தேடல் காரணங்கள்
ஆன்மாவின்
தேடல் மன்னிப்பு


அன்பும்
அறவனைப்பும்
மன்னிப்பும்
நிலையானது
மாற்றம்மில்லாதது


எண்ணங்களும்
செயல்களும்
அறிவை சார்ந்தது
நிலையில்லாதது
மாற்றம் உடையது


எண்ணங்களின் மாற்றத்தால்
செயல்கள் மாறுவதால்
நான் மாறுகிறேன் என்றால்
ஆன்மாவின் நிலை என்ன ?