30 ஜூன், 2007

பிரிவு

பூக்களை பிரிந்த
பூஞ்செடிகள்
இலையுதிர்கால
மரங்கள்
ஊதாத
புல்லாங்குழல்
மீட்டாத
வீணை
முடிவு பெறாத
ஓவியம்
நிலா இல்லாத
அம்மாவாசை வானம்
நீர் இல்லா
நதி தடங்கள்
வானம் பார்த்த
விவசாய பூமி
தாய் பசுவை
தேடும் கன்றுக்குட்டி
வேலைக்கு சென்ற
தாயைத் தேடும் குழந்தை
பிறந்த குழந்தையை
தேடும் தாய்
இதை போல
நீயில்லாத போது
நானும்........

25 ஜூன், 2007

உணர்வுகள்

பிறர் உணர்வுகளை
புரிந்துக்கொள்ள வேண்டும்
மனிதர்கள்
இல்லையென்றால்
உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகளால் காயம்படும்
உள்ளங்கள்!

மெழுகுவர்த்தி

எரியும் மெழுகுவர்த்தி
என் வாழ்க்கை
அதில்
உயிர்க்கும் ஒளி
உன் மேல்லான
என் காதல் !

அதை
காத்து நிற்பாயா
இல்லை
ஊதி அனைப்பாயா
என்னவளே
அது உன் கையில் !

23 ஜூன், 2007

என்றும் இளமையாய்

காதலே!
இறைவனிடம்
எப்படி வேண்டினாய் ?
உனக்கு மட்டும்
இப்படி ஒரு வரம்
நீ மட்டும்
என்றும் இளமையாய்....

17 ஜூன், 2007

வீட்டு பணிப்பெண்

ஏழையா பிறந்ததாள
கஞ்சித் தண்ணி வழித்தேடி
காது கழுத்து நகைய
கழட்டிக் கொடுத்து
கந்து வட்டி கடன் வாங்கி
எஜெண்டுக்கு மொத்தமா அழுது

வீட்டு வேலை
விசா வாங்கி
விமானம் ஏறி
வெளிநாடு வந்த பெண்ணே

மாடுகள ஓட்டிப்போகும்
மாட்டுக்காரன் போல் ஒருத்தன்
பெண்ணே ஒன்ன
கூட்டிப்போக வந்தான
இல்ல
ஓட்டிப்போக வந்தான

நகரத்து தெருவிலே
அழகான கட்டிடம்
கட்டிடம் உள்ளார
பெண் இவள
விற்க்கும் இடம்

மந்தையா ஒரு அறைக்குள்ள
அடைத்திருந்த பெண்களோட
மந்தையோடு மந்தையா
நீ மாட்டிக் கொண்ட மாயம் என்ன

வீட்டு வேலைக்கு
ஆள் தேடி வந்த மக்க
மாட்டு சந்தையில
மாடு தேடி வாங்குவதுப்போல
உன்ன வாங்க வருவாக
நீ விலை போன
சோறு உண்டு
இல்லாட்டி
ஒரு வேளைக்கு
ரொட்டித் துண்டு

தரகு பேசி
வாங்கிப் போவாக
தங்கம் உன்ன
உன் தலையெழுத்து
நல்லா இருந்தா
நல்லவங்க வீடு போவ
உன் நேரம்
நல்லா இல்லாட்டி
நரகத்துக்கு நீ போவ

பெண்ணே நீ
எந்த வீடு போனாலும்
செக்கு மாடா சுழழுனும்
நீ அடிமாடா வேலை செஞ்சாலும்
உனக்கு இருபது தினார் சம்பளம்

நீ பொத்தி பொத்தி
காத்த மானத்த
பொத்தல் போட
உன்ன சுத்தி சுத்தி
சில கழுகுக வட்டமிடும்

அந்த வட்டத்துல சிக்கிடினா
நீ சிதஞ்சி போய்டுவ
வாழ்வு தேடி வந்த பெண்ணே
நீ வாழ்க்கைய துழைச்சிடுவ

வீட்டு வேலைத் தேடி
வந்த மக்க
கதை சொன்னேன்
காது கொடுத்து கேட்க்கோ
கருத்திருந்தா
ஊருலேயே நீ பிழைக்க
வழி பார்த்துக்கோ

12 ஜூன், 2007

கவிதையே !

நான் என்றும்
வாசிக்க விரும்புவது
உன் இதழ்கள் என்னும்
இரண்டடி கவிதையைத் தான்....

10 ஜூன், 2007

எதைத் தேடி

பொழுதுகள் விடிகின்றன
இரவுகள் கடக்கின்றன
எதையும் அறியாமல் மனம்
தேடிக்கொண்டே இருக்கின்றன
வெயில் மழையோடு
வந்த வானவில்லின் வர்ணங்களை
உச்சிப்பொழுது
தார் சாலை கானல்களை
மாயையின் மயக்கத்தில்
நிஜங்கள் மறந்தப்பொழுது
நிகழ்வுகள் எல்லாம் கனவுகளாய்
நிழல்களில் நிஜம் தேடி
நிம்மதியின் விலாசங்கள்
மறக்கடிக்கப்பட்டு
அலைகிறது மனது
எதைத் தேடி ?