24 ஜனவரி, 2010

கண்கள் பேசிய கவிதை எங்கே

கண்ணின் மணி
நின் கண் கண்ட
கதை கூறவோ
நான் கொண்ட
துயர் கூறவோ

உன் உதடுகள்
புன்னகை பூத்தாலும்
கண்களில் ஏனடி
கண்ணீர் பூ

காதல் சொல்லிய
விழிகளில்
இன்று
வலிகள் மட்டும் ஏனடி

கவிதை பேசிய
கண்களில்
இன்று
கலக்கம் மட்டும் ஏனடி

உன்
கண்கள் சொல்லும்
கவிதை கேட்க
காத்திருப்பேன்
ஒரு அயுள் நானடி

இனியவளே என்று
பூக்கும்
உன் கண்களில்
புன்னகை
பூ

20 ஜனவரி, 2010

சில கிறுக்கல்கள்

என் நினைவுகளை
வடம் பிடித்து
இழுத்து சென்றாலும்
அது தேராய்
துடங்கிய இடத்திற்க்கு
வந்துவிடுகிறது
உன்னை நினைக்க
-------------------------------------
உன்னை
வேண்டாம் என்று
சொன்ன பின்னும்
மனம் மட்டும்
மறுக்கிறது
உன் நினைவுகளை
வேண்டாம்
என்று சொல்லுவதற்க்கு
---------------------------------------
ஒரு
முறை
முத்தமிட்டாய்
உயிர்பெற்றது
என் காதல்
மருமுறை
முத்தமிடு
மரித்துப்போகட்டும்
என் காதல்
--------------------------------------
என் மேல்
வெறுப்போடு
நீ
உன் மேல்
விருப்போடு
நான்
கடந்த காலம்
தந்த காயத்தின்
ரணங்கள்
இதயத்தில்
வலித்தாலும்
நீ
தந்த
அவமானங்கள்
வேதனையை தந்தாலும்
ஏனோ உன்னை
வெறுக்க முடியவில்லை
நீ
என்னை வெறுப்பதுபோல்

18 ஜனவரி, 2010

மரம்கொத்தி

மரமாய்
என் இதயம்
மருத்த பின்னும்
நீ
மரம்கொத்தி பறவையாய்
கொத்தி குடைகிறாய்
என் இதயத்தை

7 ஜனவரி, 2010

தேவதை

தேவதைகளிடம்
வரம் கேட்பார்கள்
நான் தேவதையை
வரமாய் கேட்டேன்

நீயும்
தேவதையைப் போலவே
வந்தாய்
மறைந்தாய்.......

6 ஜனவரி, 2010

காலம்

இன்று
உனக்கு
நான்
இறந்தகாலம்
ஆனால்
எனக்கு
நீ என்றுமே
வசந்தகாலம்......

நீ
இறந்தகாலம் கடந்தாலும்
எதிர்காலம் அறியாவிடினும்
நிகழ்காலத்தில்
உன் நிழல்
நான்.......