10 மே, 2017



என் இதயக்கரையின் நெருப்பலையே
நீ தழுவிய பொழுது எரிந்தவன் நான்
நீ வரைந்த தளும்புகள் வரி வரியாய்
விரிந்து கிடக்குது கரை முழுதாய்
ஆற்பரிக்கும் அலையாய் நீ
அமைதியான கரையாய் நான்
சலசலக்கும் ஓசை நீ
மௌனத்தின் பாஷை நான்
அலையே நீ ஓய்ந்தாலும்
விழும் இடம் நான்னாவேன்
அலையே நீ எழுந்தாலும்
எழும் இடம் நான்னாவேன்
விழு
எழு
கரைபவன் நான்னாவேன்.......

கருத்துகள் இல்லை: