என் இதயக்கரையின் நெருப்பலையே
நீ தழுவிய பொழுது எரிந்தவன் நான்
நீ வரைந்த தளும்புகள் வரி வரியாய்
விரிந்து கிடக்குது கரை முழுதாய்
ஆற்பரிக்கும் அலையாய் நீ
அமைதியான கரையாய் நான்
சலசலக்கும் ஓசை நீ
மௌனத்தின் பாஷை நான்
அலையே நீ ஓய்ந்தாலும்
விழும் இடம் நான்னாவேன்
அலையே நீ எழுந்தாலும்
எழும் இடம் நான்னாவேன்
விழு
எழு
கரைபவன் நான்னாவேன்.......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக