27 மார்ச், 2007

நேற்றைய கனவுகள்

சென்ற இரவின்
நேற்றைய கனவுகளின் ரேகைகள்
மனமெல்லாம் தடம் பதித்திட
இந்த விடிந்த பொழுதில்
வேலையில் அமர்ந்தாலும்
ஏனோ மனம்
விடிந்ததை சபிக்கிறது

போராட்டம் என்றால்
கலவரம் பேர்யிரைச்சல்
எல்லாம் இருக்குமே
இந்த மெளன போராட்டத்தில்
கலவரங்கள் இல்லை
பேர்யிரைச்சல் இல்லை
ஆனால்
ஒரு பூவின்
புரட்சி வெடிகளில்
ஆங்காங்கே சிதறிய உள்ளத்தில்
எங்கும் இன்ப ரணங்கள் !

13 மார்ச், 2007

தெரு விளக்கு

நீ ஒருத்தி
வருவதற்க்கு
நித்தம் நித்தம்
காத்திருந்தேன்

நெருப்பத்தான்
இமையாக்கி
நெடுநேரம்
பாத்திருந்தேன்

ரோட்டோரம்
விளக்கு கம்பம்
ஒத்தையா நிப்பதுப்போல
ஒத்தையா நின்னுயிருந்தேன்
ஒத்த பார்வை பாப்பன்னுட்டு


ஒத்தயடி பாதையில
ஒய்யாரம நடந்து வந்த
நினைக்கல நானும்
ஒரத்துல நின்னவன
பாக்கமத்தான் போவனுட்டு

ஒன் ஒத்த ஜடை
பூப்போல
ஒத்த மனசுக்குள்ள
ஒரத்துல இடம் கேட்டேன்

ஒரு நாளேனும்
ஒன் மனசு மாறிடத்தான்
இரவெல்லாம் வேண்டிக்கிட்டு
சாமிக்கிட்ட வரம் கேட்டேன்

வெட்டவெளி
புள்ளு தர
போல் இருந்த
என் மனச

ஏர் எடுத்து
உளுததுப் போல
நீ வந்து
உளுதுப்புட்ட

சுட்டு வச்ச
மன் பானை
போல் இருந்த
என் மனச

சுத்தி போல
உன் பேச்சால
சுக்கு நூறா
உடச்சுப்புட்ட

கத்திப் போல
உன் வார்த்தையால
கத்தி நீ பேசிப்புட்ட

பொத்தி வச்ச காதல
கடைசியில நீ
புரிஞ்சிக்காம போய்யிப்புட்ட

நீ
பிரிஞ்சிப் போனாலும்
என்ன
மறந்துப் போனாலும்

இந்த
விளக்கு கம்பம் போல
நீ போகும் பாதைக்கு
ஒளிக் கொடுப்பேன்
ஒன் நினைவால
நான் இருப்பேன்....

4 மார்ச், 2007

பருத்திவீரன்

நல்ல திரைப்படங்கள் காண்பது என்பதே மிகவும் அறிதான இந்த காலத்தில் ஒரு திரைப்படம் மனதில் வலியை தந்துவிட்டுது. இந்த படம் எற்படுத்திய தாக்கம் என் இந்த கிருக்கல்.


விதியினை மிஞ்ச யாருமில்லை
வினை விதைத்தவன் வினையருப்பான்
இவள் என்ன பாவம் செய்தாள்
யாருடைய வினை இவளை அருத்தது ?

அவள் அசைப்பட்டதெல்லம்
விரும்பியவனுடன் மணக்கோலம்
விதி அவளுக்கு
எழுதிவிட்டது மரண ஓலம்

முத்தழகி என்ற கோலம்
காமுகர்களால் ஆனது அலங்கோலம்

கையவனை காதலித்து
மனிதனாய் மாற்றி
கைப்பிடிக்கும் நேரம் பார்த்து
கையவர்களால் கற்பு
சூரையாடப்பட்டு
தரையில் சாய்ந்த சித்திரமே !

ஒரு சண்டியனை திருத்த
உயிர் துரந்த உத்தமியே !

நீ மரண படுக்கையில்
மொழிந்த வரிகள்
எல்லா சண்டியருக்கும்
வேத வரிகள்

பெண்னை போகமாய்
பார்த்த எல்ல மனிதருக்கும்
நீ ஒரு போதி மரம் !

சாதி தீயில் எரிந்தாலும்
குறையாது முத்தழகி என்ற
தங்கத்தின் தரம் !

மனதை பாதித்த படம்
உள்ளத்தை வருத்திய படம்
பருத்திவீரன் திரைப்படம்

கண்ணகி நீதிக் கேட்டு
மதுரையை எரித்தால்
அமீரின் பருத்தியூர் முத்தழகி
உனக்கு யார் நீதிக் கொடுப்பார் ?