விழுகின்ற அலை கூட
மறுபடியும் எழுகின்றன
புயல் கொன்ற கிளைகள் கூட
மறுபடியும் துளிர்கின்றன
தோல்வி என்பது நிரந்தரமில்லை
தோல்வி என்பது அனுபவமே
முயன்றால் முடியாததில்லை
முயற்ச்சியில்லாமல் எதுவும் முடிந்ததில்லை
மனதில் வலி தரும்
தோல்வியின் புண்கள்
நம்பிக்கை உழைப்பு
வெற்றியின் இரு கண்கள்
மனிதன் என்றால் போராட வேண்டும்
அவன் வாழ்க்கை மரணத்தை வென்றிட வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக