வெண்ணிலவே வெண்ணிலவே
வெட்கம் கொண்டு என்னை பார்ப்பது என்ன
கன்னித்தமிழ் பெண் இவளோ
கண்ணில் காதல் கதை சொன்னது என்ன
விழியால் வலியை தந்து சென்றது என்ன
உயிரில் உயிரை கலந்து சொன்னது என்ன
பாடுகிறேன் பாடல் ஒன்று
மனம் தேடுது உன்னை இன்று
நீ இருக்கும் இடத்தில் மட்டும்
நட்சத்திர பூ மலரும்
நீந்தி வர வான் இருந்தும்
என் இதயம் உன் விருப்பம்
இருளை மனம் தான் உடுத்தியிருக்க
வெளிச்சம் என்று நீ தருவாய்
உரக்கம் இல்லா இரவுகளில்
நெருங்கா இடத்தில் நீ இருப்பாய்
முகிலால் முகத்தை நீ மறைத்தாய்
மெளனம் மட்டும் நீ மொழிந்தாய்
என் கண்மணிகளில் நீ நிலா
என் நினைவுகளில் தினம் உன் உலா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக