வரண்ட பூமியாய்
என் உள்ளம் இருக்க
வரமாய் வருவாயோ
மழையே !
காய்ந்த வனமாய்
இங்கு வாழ்வும் இருக்க
உயிர்பிக்க பொழிவாயோ
மழையே !
கருமேக நினைவுகள்
என்னை கடந்துச் சென்றாலும்
கருனைத் துளிகளைச் சிந்தாயோ
மழையே !
உலர்ந்த உதடுகள்
வாய் பிளந்து வான்ப்பார்க்க
தாகம் தீர்க்காயோ
மழையே !
உன் வருகைக்காக
இருளடைந்தது என் வானம்
என்று பொழிவாயோ
மழையே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக