சதாம்
சில நூறுப்பேர்களை கொன்றதாய்
உனக்கு தூக்கு தண்டனைத் தந்தார்கள்
ஆறு லட்சம் பேர்களை கொன்றவர்கள்
தியாகத் திருநாளில்
உன்னை தூக்கில் ஏற்றியது
எண்ணைத் திருடர்களின் சதி
இனி
ஒவ்வொரு ஆண்டும்
நீ நினைவுக் கொள்ளப்படுவாய்
இந்த தியாகத் திருநாளில்
இது இறைவன்
உனக்கு எழுதிய விதி
உன்னை தூக்கிலிட்டதை
கொக்கரிக்கிறான்
அமெரிக்க ஜனாதிபதி
உலகத்தார் தூற்றலில்
குறுகுறுத்தன
அவர்களின் அரக்க மதி
ஒரு
வீரனாய் வாழ்ந்து
ஒரு
வீரனாய் மரணத்தை முத்தமிட்டாய்
கயிற்றை இருக்கி
உன் மூச்சை நிருத்தியவர்களால்
சரித்திரத்தில்
உன் பேச்சை நிருத்த முடியாது
மண்ணுக்குள் நீ புதைந்தாலும்
சரித்திரத்தில் நீ நிலைத்துவிட்டாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக