14 ஜூலை, 2010

என் வானிலே

என் இலக்கிய வானில்
சூரியனும் இல்லை
சந்திரனும் இல்லை
நீ மட்டும் இருக்கிறாய்
நிரந்தரமாய்

இங்கே
பகல் என்றும்
இரவு என்றும்
சொல்லுவதற்கில்லை
அம்மாவாசை
பௌர்ணமிக்கு
வழியுமில்லை
ஏன்னென்றால் நீ
தோன்றவும் இல்லை
மறையவும் இல்லை
தேயவும்மில்லை
வளரவும்மில்லை

துருவ நட்சத்திரங்களாய்
உன் இரு கண்கள்
பயணிக்கிறது
என் மொழி
உன் விழி
காட்டும் வழி

உன் மேலான
மோகங்கள்
மேகங்களாய்
திரண்டுயிருக்க
அவை மோதிக்கொள்ளும்
இடமெல்லாம்
இடியுடன்
பெய்கிறது
கவிதை மழை

கருத்துகள் இல்லை: