8 ஜூலை, 2010

சில கிறுக்கல்கள்

நனைகிறது இதயம்
உன் காதல் மழையில்
சட்டென விரி
உன்
தாவணி குடையை….

---------------------------

புல்லின் மடியில்
பனியின் தூக்கம்
உன் பூ மடியில்
என் சிற்று
க்கம்

------------------------------

உன் காதல்
சாம்ராஜ்ஜியத்திடம்
தோற்றது
என் காதல்தேசம்

------------------------------

என் உள்ள குளத்தில்
பார்வை கல்லெரிந்தாய்
சலனப்பட்டது நினைவுகள்

------------------------------

உன்
இதயத்தில்
என் புரட்சி
நம் காதலின்
மறுமலர்ச்சி

-------------------------------

ஆயிரம் சாவிகள்
என்னிடம் உண்டு
எதை
கொண்டு
திறக்க உன்
இதய பூட்டை

--------------------------------

ஆசையை விதைத்தேன்
காதல் அறும்பியது
காதலை விதைத்தேன்
கண்ணீர் அருவியானது

---------------------------------

நானும் எமன்தான்
உன் வெட்கத்திற்க்கு

--------------------------------

இருக்கிறதா அகராதி
உன் விழியின் மொழியை
கற்றுக்கொள்ள..

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

1000 kavidaigalai kondu oruvarin manadil nulaiya muyarchikalam, aanaal iravanin porutham pera yanna seithai?

Rafiq சொன்னது…

athu iravanukuthan theriyum.....