நனைகிறது இதயம்
உன் காதல் மழையில்
சட்டென விரி
உன் தாவணி குடையை….
---------------------------
புல்லின் மடியில்
பனியின் தூக்கம்
உன் பூ மடியில்
என் சிற்றுறக்கம்
------------------------------
உன் காதல்
சாம்ராஜ்ஜியத்திடம்
தோற்றது
என் காதல்தேசம்
------------------------------
என் உள்ள குளத்தில்
பார்வை கல்லெரிந்தாய்
சலனப்பட்டது நினைவுகள்
------------------------------
உன்
இதயத்தில்
என் புரட்சி
நம் காதலின்
மறுமலர்ச்சி
-------------------------------
ஆயிரம் சாவிகள்
என்னிடம் உண்டு
எதை கொண்டு
திறக்க உன்
இதய பூட்டை
--------------------------------
ஆசையை விதைத்தேன்
காதல் அறும்பியது
காதலை விதைத்தேன்
கண்ணீர் அருவியானது
---------------------------------
நானும் எமன்தான்
உன் வெட்கத்திற்க்கு
--------------------------------
இருக்கிறதா அகராதி
உன் விழியின் மொழியை
கற்றுக்கொள்ள..
2 கருத்துகள்:
1000 kavidaigalai kondu oruvarin manadil nulaiya muyarchikalam, aanaal iravanin porutham pera yanna seithai?
athu iravanukuthan theriyum.....
கருத்துரையிடுக