அந்த மௌன
தருணங்களை
அசைபோடுகிறது மனம்
தாகம் கொண்ட
நெஞ்சோடு
விழிகள் நேரிடுகின்றன
விழிகள் பருகியது
காதலை
மிரள்ச்சியில் இருந்து
மீள மறுத்த மனதை
மீட்க்க முயன்றேன்
ஒரு யுத்தம் நடத்தியது
நினைவுகள்
கனவுகளின் ஊர்வலத்தில்
தினம் அவள் தரிசனம்
தரிகெட்டே திரிந்தேன்
தடுமாறிய வாழ்கையுடன்
அவள் கால்தடங்கள்
தேடி…..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக