25 மார்ச், 2010

சில கிறுக்கல்கள்

நீ
துவைத்த இதயத்தில்
நீங்கவில்லை
உன் நினைவுகளின்
கறைகள்
-------------------------------------------------------------
அவள்
என் வாழ்வை
அள்ளி சென்ற
ஆழி பேரலை
------------------------------------------------------------


நிலாவைத்தான்
வீட்டுக்கு
அழைத்துவந்தேன்
அது தேய்பிறையானதால்
அம்மாவாசையானது வாழ்வு


-----------------------------------------------------------


சுமைத்தாங்கி
கற்களுக்கு
சுமைகள் பாரம்மில்லை
உன் நினைவுகள்
சுமக்கும் இதயத்திற்க்கு
வலிகள் தெரிவதில்லை

கருத்துகள் இல்லை: