24 ஜனவரி, 2010

கண்கள் பேசிய கவிதை எங்கே

கண்ணின் மணி
நின் கண் கண்ட
கதை கூறவோ
நான் கொண்ட
துயர் கூறவோ

உன் உதடுகள்
புன்னகை பூத்தாலும்
கண்களில் ஏனடி
கண்ணீர் பூ

காதல் சொல்லிய
விழிகளில்
இன்று
வலிகள் மட்டும் ஏனடி

கவிதை பேசிய
கண்களில்
இன்று
கலக்கம் மட்டும் ஏனடி

உன்
கண்கள் சொல்லும்
கவிதை கேட்க
காத்திருப்பேன்
ஒரு அயுள் நானடி

இனியவளே என்று
பூக்கும்
உன் கண்களில்
புன்னகை
பூ

கருத்துகள் இல்லை: