31 ஜனவரி, 2011

சின்ன சின்ன கிறுக்கல்கள்

காற்றின் தாளங்களுக்கு
உன் துப்பட்டா நடனத்தின்
ரசிகன் நான்
----------------------------------------------------------------------------------------------
பகலின் பரபரப்பு
இரவின் மௌனம்
மாறி மாறி வந்தாலும்
மாறாததும்
மறையாததும்
உன் நினைவுகள்
----------------------------------------------------------------------------------------------
அழகான ஓவியங்கள்
உன் கண்கள்
அதில் கவிதைகளாய்
உன் கண் மை
----------------------------------------------------------------------------------------------
கொக்கின்
ஒற்றை கால் தவம்
மீனுக்காக
என் பேருந்துநிறுத்த
தவங்கள் எல்லாமே
உன் கடைக்கண் பார்வைக்காக
----------------------------------------------------------------------------------------------
என் வார்த்தை
தவங்களின்
வரம் நீ
கவிதைகளாக
----------------------------------------------------------------------------------------------
புத்தாடை பொழிவுடன்
நம் காதல்
கந்தல்லாடையாக
நான்
----------------------------------------------------------------------------------------------
நான்
பார்க்கும் பொழுதெல்லாம்
அழகின் கர்வம்
உன்னை பற்றிக்கொள்ளுகின்றன
----------------------------------------------------------------------------------------------
வனங்கள் அழிவதால்
மழைப் பொழிவதில்லை
மனங்கள் முறிவதால்
உறவுகள் நிலைப்பதில்லை


கருத்துகள் இல்லை: