27 மார்ச், 2007

நேற்றைய கனவுகள்

சென்ற இரவின்
நேற்றைய கனவுகளின் ரேகைகள்
மனமெல்லாம் தடம் பதித்திட
இந்த விடிந்த பொழுதில்
வேலையில் அமர்ந்தாலும்
ஏனோ மனம்
விடிந்ததை சபிக்கிறது

போராட்டம் என்றால்
கலவரம் பேர்யிரைச்சல்
எல்லாம் இருக்குமே
இந்த மெளன போராட்டத்தில்
கலவரங்கள் இல்லை
பேர்யிரைச்சல் இல்லை
ஆனால்
ஒரு பூவின்
புரட்சி வெடிகளில்
ஆங்காங்கே சிதறிய உள்ளத்தில்
எங்கும் இன்ப ரணங்கள் !

1 கருத்து:

Soul Search சொன்னது…

புலம் பெயர்ந்து, சுயம் தொலைத்தோம்...பணம் படுத்தும் பாடு...