நீ ஒருத்தி
வருவதற்க்கு
நித்தம் நித்தம்
காத்திருந்தேன்
நெருப்பத்தான்
இமையாக்கி
நெடுநேரம்
பாத்திருந்தேன்
ரோட்டோரம்
விளக்கு கம்பம்
ஒத்தையா நிப்பதுப்போல
ஒத்தையா நின்னுயிருந்தேன்
ஒத்த பார்வை பாப்பன்னுட்டு
ஒத்தயடி பாதையில
ஒய்யாரம நடந்து வந்த
நினைக்கல நானும்
ஒரத்துல நின்னவன
பாக்கமத்தான் போவனுட்டு
ஒன் ஒத்த ஜடை
பூப்போல
ஒத்த மனசுக்குள்ள
ஒரத்துல இடம் கேட்டேன்
ஒரு நாளேனும்
ஒன் மனசு மாறிடத்தான்
இரவெல்லாம் வேண்டிக்கிட்டு
சாமிக்கிட்ட வரம் கேட்டேன்
வெட்டவெளி
புள்ளு தர
போல் இருந்த
என் மனச
ஏர் எடுத்து
உளுததுப் போல
நீ வந்து
உளுதுப்புட்ட
சுட்டு வச்ச
மன் பானை
போல் இருந்த
என் மனச
சுத்தி போல
உன் பேச்சால
சுக்கு நூறா
உடச்சுப்புட்ட
கத்திப் போல
உன் வார்த்தையால
கத்தி நீ பேசிப்புட்ட
பொத்தி வச்ச காதல
கடைசியில நீ
புரிஞ்சிக்காம போய்யிப்புட்ட
நீ
பிரிஞ்சிப் போனாலும்
என்ன
மறந்துப் போனாலும்
இந்த
விளக்கு கம்பம் போல
நீ போகும் பாதைக்கு
ஒளிக் கொடுப்பேன்
ஒன் நினைவால
நான் இருப்பேன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக