கானலாய் போன காதலை
கவிதையால் உயிர்தெழச் செய்ய
வார்த்தைகள் தேடி
வாசலில் நிற்கிறேன்
காதலை
பகடைக்காயாய் வைத்து
அரங்கேறிய விளையாட்டில்
வெட்டுபட்டது என்னவோ
நீயும் நானும் தான்
விளையாடிப் பார்த்தவர்கள்
ஓய்ந்துபோனார்கள்
வாழ்க்கை கேள்விக்குறியாய்
ஒடுங்கிபோனது என்னவோ
நீயும் நானும் தான்
என்னிடம்
காதல் மட்டுமே
இருந்திருந்தால்
என்றோ
உன்னிடம் சரண்ணாகிருப்பேன்
தன்மானத்தை
காதல் சுடும்போது
தன்மானம்
காதலை சுடுகிறது
மொத்தத்தில்
காதல்
என்னை
சுட்டுவிட்டது……..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக