உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்
உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
பகல் இரவுகள் நானும்
பல கனவு கான்கிறேன்
பனி துளியிலும் நானே
பொன் முகத்தை தேடினேன்
கண்கள் இரண்டிலும் தானே
புது கவிதை படிக்கிறேன்
கைகள் பேசிய கதையை
நான் காற்றை கேட்கிறேன்
என்னை கடந்திட்ட நேரம்
இதயம் நின்று துடிக்குமே
ஆடை உரசிய உணர்வோ
உன்னை அனைக்க தோன்றுமே
இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்
உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
என்னை கடந்த நீயும்
ஏன் திரும்பி பார்கிறாய்
ஓர பார்வையாலே நீயும்
என்னை உரசி பார்கிறாய்
காற்றில் அழைந்திடும் கூந்தல்
என்னை கட்டி இழுக்குதே
கால் தடங்களை கண்டு
மனம் பின் தொடருதே
எதுவரை இந்த பயணமோ
பாதியில் இது முடியுமோ
உதடுகள் உதிர்க்குமோ வார்த்தையை
உதிர்ந்து போகுமோ வாழ்கையும்
இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்
உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக