விழி வழி புகுந்து
புது வலி தந்து
உயிர் வரை பரவி
உணர்வுகளை துருவி
உறக்கம் பறித்து
கிறக்கம் கொடுத்து
இதயம் வேகமாய் திடுதிடுக்க
உதடுகள் தனியாய் முனுமுனுக்க
மனம் நினைவுகளுக்கு தாழ் போட
கால்கள் அதை தேடியே ஓட
மனம் பாரமாய் சுமக்கும்
இருந்தும் அது
காகிதமாய் பறக்கும்
மனத்துக்குள்ளே ஒரு மோதல்
சுகமாய் வலித்திடும் காதல் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக