15 ஆகஸ்ட், 2007

வரம் வேண்டும் தேவதையே!

சருகுகள்
காற்றில் சுழல்வதுப்போல்
சிரிப்பினால்
நீ என்னை
சுழல்ல விட்டாய்

சிறகுகள்
தந்து பறக்கவிட்டு
பின்பு
சிறைகளில் என்னை
நீ அடைத்தாய்

சிலுவையை
கூட சுமந்திடலாம்
காதல்
தந்த ரணங்களின்
வலிகள் சுமப்பதற்க்கு

இரவுகள்
மெல்ல விடிந்திடுமே
இருக்கங்கள்
என்று உடையும்
இரக்கம் பிறப்பதற்க்கு

கவிதை
வரிகளின் ஆழத்தில்
காதல்
வலிகளின் வேதனை
நீ அறிவாய்

தேவதை
போல வந்தவளே
காதல்
வரங்களை என்று
நீ தருவாய்....................

கருத்துகள் இல்லை: